ஆங்கில வழிக்கல்வியிலும் தமிழில் இரண்டு பாடங்கள் வேண்டும்..!

ஆங்கில வழிக்கல்வியில்  பட்டம் பெற்றவர்கள் கூட  தமிழில் எழுத மிகவும் சிரமப்படுகின்றனர். சாரிங்க எனக்கு  தமிழ் சரியா எழுத வராது  என சற்றே பெருமையுடன் சொல்லி விடுகின்றனர். ஆனால் ...! ஆங்கிலம் எனக்கு  சரியா வராது என சொல்ல ஆங்கிலம் அறியாதவர்கள் வெட்கம் தான் அடைந்தோம்.!
அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி மிகுந்துவிட்டது. ஆங்கிலம் தெரியாமல் எதிர்காலத்தை கடத்துவது  மிகுந்த சிரமம் என்பது உண்மைதான்.
அதே  சமயம் தாய்மொழி  தமிழ்  நம் கண்முன்னே தினமும் சிறிது சிறிதாக சுருங்கிகொண்டுஇருப்பதை மறுக்க முடியாது..! 

ஆங்கில வழியில் படித்தாலும்  குழந்தைகளுக்கு நாம்  தமிழ்  சொல்லி கொடுத்துவிடலாம் என்றால்..உண்மையில்  குழந்தைகளுக்கு  தமிழ்  சொல்லிக்கொடுப்பது  மிகுந்த சிரமமாக உள்ளது..! கோபம் வந்தால் கூட குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில்  தான் கோபம்  வருகின்றது..! எதாவது  எண் சொன்னால் இங்லீஸ்ல சொல்லுங்க ..! என சொல்கின்றார்கள் ..! தமிழில் எண் தெரிவதை விட ஆங்கிலமே  அவர்களுக்கு எளிதாய் தெரிகின்றது..!

பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து தமிழ் அழிய நாமும் ஒரு காரணமாக இருக்கின்றோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சியும் உண்டாகின்றது. ஆனாலும் எதிர் காலத்தில் ஆங்கிலம் தெரியாமல் மிகுந்த சிரமம் என்பதும் புரிகின்றது..! 

இந்த சூழலில் தமிழ்  அழியாமல்  ஓரளவேனும்  காக்க ஒரு  யோசனை தோன்றியது ..!  அதாவது  ஆங்கில வழி கல்வி முறையிலும்  தமிழில்  இரண்டு பாடங்கள் இருக்க வேண்டும்..! ஆங்கிலம்,அறிவியல்,கணிதம் ஆகியவை ஆங்கிலத்தில் இருக்கட்டும். தமிழ்  பாடத்தோடு வரலாற்று பாடங்களையும் தமிழில்   கற்பிக்க பட வேண்டும்..இதனால் தமிழை கூடுதலாக படிக்கும் நிலை மாணவர்களுக்கு ஏற்படும்... இது குறித்து  உங்கள் கருத்துகளை   சொல்லுங்கள்...!!!


>