கோனே பால்சும் கொண்டாட்டமும்

ஆயுத பூஜை க்கு மறுநாள் எப்போதும் கடை விடுமுறைதான். அன்றைய தினத்தில் பேச்சுலர்கள் எல்லாம் சிறிய சுற்றுலா செல்வது வழக்கம்.
இந்த தடவை நாங்கள் சென்றுவந்தது கோனே பால்ஸ். சென்னையில் இருந்து சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர பிரதேசம் புத்தூர் அருகில் இருக்கிறது இந்த கோனே பால்ஸ் அருவி குளியல் பிரியர்களுக்கு அருமையான இடம் இது .

சென்னை பெரம்பூர் -செங்குன்றம் -பெரிய பாளையம் -ஊத்துக்கோட்டை வழியே சென்றோம் ஊத்துக்கோட்டையுடன் தமிழக எல்லை முடிகிறது . அதிகம் போக்குவரத்து இல்லாத அகலமான சாலை. வழியில் நெறைய நாட்டு ரோஜா ,ஜாதிமுல்லை தோட்டங்களை காணலாம் .






புத்தூருக்கு ஒரு எட்டு கிலோமீட்டருக்கு முன்னர் இடது புறம் ஒரு சாலை பிரிகிறது .



அருவி நெருங்க நெருங்க ஒரு உற்சாகம் தொற்றி கொள்கிறது..! அருவியில் அதிக அளவு தண்ணிர் விழாது இருந்தாலும் திருப்தியாய் குளிக்கலாம் ..!
''தண்ணில'' குளிப்பது கூடுதல் உற்சாகம் .







அருவிக்கு அருகிலேயே ஒரு சிவன் கோவில் உள்ளது

கோவில் உட்புறம்

மசாஜ் செய்துவிட ஆட்கள் இருக்கிறார்கள்



பெரிய கடைகள் ஏதும் கிடையாது சமைத்து தர ஆட்கள் உண்டு ..! சாப்பாடு கொண்டு செல்வது நல்லது ..!நாங்க பிரிஞ்சி சாதமும் சிக்கன் குருமாவும் கொண்டு போனோம்.


அருவியில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் தங்கும் விடுதி உள்ளது ஏசி வசதியுடன் அறைகள் உள்ளன. அக்கம் பக்கம் வீடுகள் இல்லாத மலைகாட்டு பகுதி. இங்கே தங்கி நள்ளிரவில் குளிப்பது த்ரில்லிங்காக இருக்கும்



இங்கு குரங்கு கூட்டம் அதிகம். நன்றாக நட்புடனும் அன்புடனும் பழகுகின்றன.


பெண்கள் குளிக்க தனி வசதி ஏதும் இல்லை. உடைமாற்ற அறை அருவிக்கு அருகிலேயே உள்ளது . பாதுகாப்புக்கோ இன்ன பிற விஷயங்களுக்கோ அங்கே ஆட்கள் யாரும் கிடையாது . ஆங்காங்கே உடைந்த மது பாட்டில்கள். குடும்பத்துடன் நிறைய பேர் வருகிறார்கள் ஆனால் குடித்துவிட்டு கும்மாளம் போடுபவர்கள்தான் அதிகம்.




.

>