சுற்றுலா பயணிகளை பயமுறுத்தும் சன் டிவி

சன் டிவி யின் நிஜம் நிகழ்ச்சி சுற்றுலாதளங்களையும் அங்குள்ள ஆபத்துகளை பற்றியும் விளக்கி வருகிறது. ஆபத்துகளை பற்றி என்றால் ஆபத்து களை மட்டும் பெரிது படுத்தி பயமுறுத்துகிறது.





அந்தமான்

அந்தமானை பற்றி சொல்லும்போது எப்போதும் அங்கே நில நடுக்கம் ஏற்பட்டு கொண்டே இருப்பதாகவும் அங்கே சுற்றுலா சென்றால் அவ்வளவுதான் என்கிற ரீதியில் இருந்தது.

ஒகனேக்கல்

மரண அருவி என்றும், மாதம் மாதம் பலர் இங்கே மரணமடைகிறார்கள் என்றும் எதோ ஒரு சைத்தான் வாழும் இடம்போல ஒகனேக்கல் பற்றி சொல்லி இருந்தனர்.

ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை பற்றி எடுத்து சொல்லுவது தவறில்லை.
ஆனால்..? அந்த இடத்திற்கே போக கூடாது என்பதுபோல சொல்லி பயமுறுத்துவது சரியா ...?

ஒரு நாட்டின் வருவாயில் சுற்றுலா தளங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்த சுற்றுலா தளத்தை நம்பி பலர் பிழைப்பு நடத்துகிறார்கள்.

செய்திகளை பரபரப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒரு சுற்றுலா தளத்தின் ஆபத்துகளை மட்டும் பெரிது படுத்தி அந்த இடத்துக்கே மக்களை போகவிடாமல் தடுக்கும் வகையில் செய்திகளை வழங்குவது சரியா ..? அந்த இடத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்களை பற்றியும் ,அந்த பகுதியில் வாழும் மக்களின் மனநிலையை பற்றியும் யோசிக்க வேண்டாமா ..?

சன் டிவி செய்வது சரிதானா ...?

>