சபரிமலை ஒரு பயண அனுபவம் --படங்களுடன்

தொடர்ச்சியா ஏழு வருஷம் மலைக்கு போயிட்டு வந்தாச்சு . இந்த வருஷம் போயிட்டு சனி இரவு (26-12-2009) 2 மணிக்கு வந்தேன். பயண அனுபவத்தை கொஞ்சம் பகிர்ந்துகிறேன்..!

செல்லும் வழிகள்

பெரிய பாதை

எரிமேலியில் இறங்கி அங்கிருந்து பெரிய பாதை ழியே பம்பை சென்று செல்வது. மொத்தம் 40 கிலோ மீட்டர் என்று சொல்கிறார்கள் நான் அந்த பாதையில் சென்றதில்லை.
சிறிய பாதை

நேராக பம்பை சென்று மலை ஏறுவது 4-5 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேட்டுபாதை

நேராக குமுளி சென்று அங்கிருந்து வண்டி பெரியார் என்ற இடம் சென்று அங்கே இருந்து புல்மேடு செல்ல வேண்டும் வண்டி பெரியாரில் இருந்து கரடு முரடான பாதையில் செல்ல வேண்டும் .மிகவும் மோசமான சாலை அது. குமுளியில் இருந்து பஸ் வசதியும் தனியார் ஜீப் போக்கு வரத்தும் உண்டு.

இந்த இடம் சபரி மலைக்கும் மேலே இருக்கிறது இங்கிருந்து சபரிமலை நோக்கி மலை இறங்க வேண்டும் 6-8 கிலோமீட்டர் இருக்கும்.

புல்மேடு ..! மலை உச்சியில் புற்கள் மண்டி கிடக்கிறது அந்த மலை பிரதேசத்தில் இந்த இடமே மிக உயரமாக தோன்றுகிறது..!
இந்த பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் சகஜமாக யானைகள் உலவும் இடம்.அங்கங்கே யானை சாணம் கிடக்கிறது சில இடங்களில் பிரெஷாக சாணம் ...!

நாங்கள் இப்போது சென்று திரும்பியது இந்த வழியேதான்..!

புல் மேட்டு மலை




கீழ் நோக்கி இறங்கும் வழி

வன வழி இங்கிருந்து ஆரம்பம்

மலையில் இறங்கும்போது தலையில் இருமுடி,சன்னதியில் கூட்டம் பற்றிய சிந்தனைகள் அதிகம் இருப்பதால் கானகத்தை அனுபவிக்க முடியாது விறு விறு வென இறங்கிவிடுவோம். வரும்போதுதான் சுவாரஸ்யமே...!!!

காலை பத்து மணிக்கு இறங்க ஆரம்பித்தோம் இறங்க மூன்று மணிநேரம் ஆனது எங்களுக்கு...! சிலர் செம ஸ்பீடில் சென்றார்கள்.! சுவாமி தரிசனம் முடித்து இரவு தங்கி நெய் அபிஷேகம் எல்லாம் முடித்து மறுநாள் காலை ஆறு மணி அளவில் மலை ஏற ஆரம்பித்தோம் ...!

எந்த ஒரு இடத்திலுமே அதிகாலை மிக அழகாய் தோன்றும் அடர்ந்த வனத்திற்குள் சொல்ல வேண்டுமா ??? மெல்ல மெல் பொழுது புலர ஆரம்பித்தது ஓங்கி உயர்ந்த மரங்கள்...! சில்லென்ற காற்று...! ஈரமில்லாத குளிர்ந்த தரை பகுதி..! செருப்பில்லாத வெற்றுபாதங்களுடன் நடை...!

மலை ஏறுவது கண்டிப்பாக கடினம்தான் தூரத்தை நினைக்கும்போது மிகவும் மலைப்பாகத்தான் இருக்கும் . மெல்ல ரசித்து அனுபவித்து செல்ல வேண்டும் என முடிவு செய்த பிறகு மலை என்ன ? தூரம் என்ன ?
கட்டுக்குள் பறவைகளை காணமுடியவில்லை சில பூச்சிகள் ,வண்டுகள் சத்தம் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை..! எப்போவாவது சில குரங்குகள் கண்களில் தட்டுப்படும் இங்கேயும் சில இடங்களில் யானை சாணம் கா முடிந்தது.




வனத்திலிருந்து வானம்

காட்டுக்குள் ஒரு கம்பளி பூச்சி


வழியில் ஒரு நீர்க்கசிவு ஒரு அருவிபோல...!

நவ யுகத்தின் பாதிப்பு சிறிதும் இல்லாத கானகம்..! பலநூறு வருடங்களுக்கு முன்னரும் இந்த இடம் இப்படித்தான் இருந்திருக்கும் இன்னும் பல நூறு வருடங்களுக்கு பிறகும் இந்த இடம் இப்படிதான் இருக்கும் ????? இந்தஇடத்தை காண்பதே ஒரு இறை தரிசனம்தான் ...!


இந்த வழியில் நான்கு இடங்களில் உணவகங்கள் உள்ளது.பிரத்யோக உணவு மரவள்ளி கிழங்கும் ,கஞ்சி சாதமும் ..! சுட சுட பரோட்டாவும் கிடைகிறது. வடை பஜ்ஜி எல்லாம் கிடைகிறது . எல்லா கடைகளிலும் நாரங்கி வெள்ளம் (எலுமிச்சை உப்பு தண்ணீர்) கிடைகிது .


காட்டு ஹோட்டல்

சற்று சமமான இடத்தில் கொஞ்சம் ஓய்வு

மீண்டும் புல்மேடு வந்து அங்கிருந்து வண்டிபெரியார்வரை ஜீப்பில் பயணம். அங்கே எங்கள் வண்டியை அடைந்து குமுளி வந்து கொஞ்சம் ஷாப்பிங் (மிளகு,கிராம்பு ,தைலம்,போன்றவை)

குமுளியில் இருந்து வண்டி பெரியார் செல்லும் சாலை

குமுளியில் புறப்பட்டு நேராக சுருளி அருவியில் ஒரு குளியல்....!
சுருளி செல்லும் வழியில் நிறைய திராட்சை தோட்டங்கள்...! (போட்டோ எடுக்கவில்லை )

அடுத்து பழனி


என்னதான் ஊரெல்லாம் சுத்தினாலும் நம்ம பழனிக்கு வந்தவுடன் என்னமோ சொந்த ஊருக்கு வந்ததுபோல ஒரு உணர்வு. பழனியில் இரவு தங்கி அதிகாலையில் எழுந்து மலை றி முருகப்பெருமான் தரிசனம்.


மலை மேலிருந்து ...!


படியேற ஆரம்பிக்கும் இடத்தில் தொப்பி விற்கும் ஒருகடையில்

பழனியிலும் கொஞ்சம் ஷாப்பிங் பஞ்சாமிர்தம் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் முதலியன...!

சும்மா வெளையாட்டுக்கு....!


திருச்சி காவிரி ஆற்று பாலம்.
(வரும்போது காருக்குள்ளிருந்து ஒரு கிளிக்)

வரும்போது சமயபுரம் சென்று அம்மனை தரிசித்துவிட்டு வந்தோம்


ம்ம்ம்... நல்ல படியா போயிட்டு வந்தாச்சு...! விரதமெல்லாம் முடிஞ்சாச்சு...! நியூ இயர் வருது...! இனி கொண்டாட்டங்கள் ஆரம்பம்...! ஸ்டார்ட் கவுன் டவுன் 1..2..3..4...


...
>