ஐயோ....வீணாய் போகுதே ...மழைச்செல்வம்...!!!





இந்நேரம் இந்த மழையில் ஒரு வருடத்தில் விவசாயத்திற்கு நமக்கு தேவைப்படும் நீரில் கணிசமான அளவு நீர் வீணாய் கடலில் போய் கலந்திருக்கும்.

இப்படி இங்கேயே உற்பத்தியாகும் நீரிணை கடலில் கலக்கவிட்டு அடுத்தவருடம் கர்நாடகா காரனிடம் கையேந்தி நிற்க போகிறோம்.


வீராணம் ஏரி

அய்யா தமிழக முதல்வரே...!!

ராஜராஜ சோழன் காலத்துக்கு முந்தய காலத்துல கொள்ளிடம் ஆத்துல உபரி தண்ணி அநியாயமா கடல்ல கலக்குரத பார்த்து பொறுக்க முடியாம கட்டுனதுதானே அய்யா வீராணம் ஏரி..! இன்னிக்கு அந்த வீராணம் ஏரியால எவ்ளோ நிலங்கள் பாசன வசதி பெருது...!

நல்லா மேம்பாலம் எல்லாம் கட்டுறீங்க..! அதேபோல இந்த வீணா போற மழை தண்ணிய தேக்கி வைக்குற மாதிரி தடுப்பு அணைகள கட்ட கூடாதா..!

இலவச கலர் டிவி வேணாம்யா...! ஒரு ரூபாய்க்கி அரிசி வேணாம்யா...!

அநியாயமா கடல்ல போயி கலக்குற தண்ணிய தேக்கி வைக்கிறமாதிரி எதாச்சும் நீர்த்தேக்கம், அணை,ஏரி உருவாக்குங்கையா புண்ணியமா போகும்...!

>