எங்க குருவுக்கு பிறந்தநாள் (பங்கு வணிகம் திரு .எம் .சரவணகுமார்)


தமிழில் பங்கு வணிகம் என்னும் வலைத்தளம் உருவாக்கி
அதன் மூலம் ஆயிர கணக்கான பங்கு வணிகர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் எங்கள் குரு திரு .எம் .சரவ குமார் அவர்கள் 04 .07 .2009 இல் பிறந்தநாள் காண்கிறார்.அவருக்கு எங்கள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தமிழில் பங்கு வணிகம் - 800




இன்றைய தினம் தமிழில் பங்கு வணிகம் சரியாக 800 பதிவுகளை நிறைவு செய்து இருப்பது கூடுதல் சிறப்பு. தினசரி அவர் வழங்கும் அன்றைய தினத்திற்கான சந்தை நிலவரம் குறித்த கணிப்பு வர்த்தகம் செய்பவர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. ஒரு பதிவினை படித்துவிட்டு பின்னுட்டம் இடவே சோம்பல் படும் நிலையில், மற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு தினமும் சந்தை நிலவரத்தை அசராமல் அளித்துவரும் எங்கள் ''குரு'' விற்கு நன்றி செலுத்த அவரால் பயனடையும் அனைவருமே கடமை பட்டுள்ளோம்!



மேலும் , தனது வலைத்தளம் மூலம் தினசரி குறிப்பு வழங்குவதோடு மட்டுமின்றி paisa power என்னும் சாட் ரூம் உருவாக்கி பங்கு வணிகத்தின் நுணுக்கங்களையும், தொழில் நுட்ப பகுப்பாய்வினையும் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பொறுமையுடனும் அக்கறையுடனும் விளங்கியவர்.

ஆங்கிலத்தில் பங்குவணிகம் பற்றி பல தளங்கள் உள்ளன.ஆனால் தமிழில் அப்படி தளங்கள் ஏதும் இல்லையே என்ற ஆதங்கத்தில் தமிழில் பங்குவணிகம் தளத்தை உருவாக்கியவர்.

இத்தனைக்கும் தனக்கு சொந்தமான திரை அரங்கம் ,மற்றும் கல்வி நிறுவனங்கள் சிலவற்றையும் நிர்வகித்து வருபவர். பல அலுவல்களுகிடையே மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு சேவை மனப்பான்மையுடன் தினசரி பதிவெழுதும் எங்கள் குருவை என்ன சொல்லி பாராட்டுவது!!

இவர் கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்,இதே கும்ப ராசி, சதய நட்சத்திரத்தில் பிறந்தவர் மன்னர் ராஜ ராஜ சோழன்! ஒருவேளை இந்த ராசி இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற மன்னர் குணம் இயல்பாகவே இருக்குமோ?





பங்கு வணிகத்தில்
ஈடு
பட்டுவரும் ஆயிரகணக்கானவர்களுக்கு
உதவி வரும் எங்கள் குரு எம் .சரவண குமார் அவர்கள் மேலும் பல ஆயிர கணக்கான பதிவுகள் எழுதவேண்டும்,மேலும் எல்லா வளங்களும் பெற்று
எவ்வித நோய் நொடியுமின்றி பல்லாண்டுகள் வாழவேண்டுமென உளமார வாழ்த்துகிறோம்!



நீங்களும் வாழ்த்து சொல்லுங்க!!






>