ஜீவன் பிரியும் சுகமான தருணம்

ஒரு இளனி கொடுத்து பார்க்கலாமா?

இல்ல கொஞ்சம் நல்லெண்ணைய வாயில ஊத்தி விட்டா முடிஞ்சுடும்னு சொல்லுறாங்க !

ரெண்டு நாளா இப்படி இழுத்துகிட்டு இருக்கே? கெழத்துக்கு நெறைய ஆசைபோல அதான் இப்படி இழுத்துகிட்டு கெடக்கு!

ஈனஸ்வரத்தில் எனக்கு கேட்கத்தான் செய்தது! தலை அருகில் அமர்ந்து ஒரு ஜீவன் மட்டும் கவலையுடன் எனக்கு விசிறி விட்டு கொண்டு இருக்க ....!!!

இன்னிக்குள்ள முடிஞ்சுடும் முடிஞ்சுட்டா நைட்டு பார்ட்டிதான் ,கச்சேரிதான் என் பேரன் யாரிடமோ செல்போனில்........!!

டேய்..! எது பேசினாலும் வெளில போய் பேசு பாட்டி கேட்டா வருத்தப்படும் ....இது என் மகள்!!!

என்ன தான் சொல்லுறாரு தாத்தா போவாரா? போக மாட்டாரா ? குறும்புடன் யாரோ ஒரு உறவுக்கார இளைஞன்.........!!!---என் ''வயதில்'' நானும் இப்படி பேசி இருக்கிறேன்.

எல்லோர் முகத்திலேயும் ஒரு ஆர்வமும் சோர்வும்!

நேரம் செல்கிறது உள்ளே ஒரு மாற்றம்!

எழுந்து அமர்கிறேன் என்ன ?? இது ?? அசைய கூட முடியாத என்னால் எழுந்து அமர முடிகிறதே ?? இல்லை !!இல்லை !! நான்தான் எழுந்து அமர்கிறேன் என் உடல் அசையவில்லை புரிந்து விட்டது!! ''தருணம் வந்து விட்டது!'' ஆஹா...! என்ன ஒரு குளிர்ச்சி....!! என்ன ஒரு அற்புதமான உணர்வு........! அசைய கூட திராணியற்ற வயோதிக உடலிலிருந்து பறவை போன்ற சுறுசுறுப்புடன் எழ முடிகிறதே ...! அட... அற்புதமே .....!! ஆனந்தம் ...பேரானந்தம் ...! இப்போது ''அந்த'' உடலை பார்த்து முன்னர் சிரித்து கொண்டிருந்தவர்களும் கலங்கி நிற்க........ நான் சிரித்து கொள்கிறேன்..!

பிரசவத்தில் மனிதன் ஜனிக்கிறான்! மரணத்தில் ஆன்மா ஜனிக்கிறது !!

இதோ! இப்போது பால் வெளியில் சுகமாக நீந்திக்கொண்டு .............!!!




>

மரங்களை ரசிப்போம் வாருங்கள்!!!

இயற்கையின் படைப்புகளில் அனைத்துமே ரசிக்க கூடியதுதான்! மலைகள்,வானம்,மேகம்,அருவிகள்,றுகள்,நிலவு நட்சத்திரங்கள்,சூரியன்,கடல், மழை,பனி,காலை,மாலை,இரவு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! இயற்கையின் டைப்புகளில் நம்மை மிகவும் வியக்க வைப்பது மரங்களும் கூடத்தான்! எத்தனை விதமான மரங்கள்? பூப்பூக்கும் மரங்கள்! காய் கொடுக்கும் மரங்கள்!கனி கொடுக்கும் மரங்கள்! நிழல் கொடுக்கும் மரங்கள்! அதிகமா நாம் மரங்களை பார்த்து ழகி விட்டதால் தை கவனிக்காமல் அதன் அழகினை ரசிக்காமல் விட்டு விடுகின்றோமோ தோன்றுகிறது!

நடமாடும் உயிரினங்களில் அவலட்சணமான! தொந்தி தொப்பையுடன்! கூடிய அருவெருக்க கூடிய சில வகை உயிரினங்களை காணலாம்! ஆனால் மரங்களை பாருங்கள் மிக நேர்த்தியான வகையில் செய்து வைத்தாற்போல அதன் அமைப்பும் வளர்ச்சியும் இருக்கும்!

மரங்களை வைத்து பதிவெழுத வேண்டும் வித விதமான மரங்களை படமெடுக்க வேண்டும் என நினைத்த பிறகு ,போன வாரம் ஊருக்கு சென்ற போது தஞ்சை -பட்டுக்கோட்டை இடையே பஸ்சில் சென்ற போது மரங்களை கவனித்தால் அடடா! எத்தனை எத்தனை விதமான மரவகைகள்
பஸ்சில் போனதால் எதையும் படமெடுக்க முடியவில்லை!

அடுத்த முறை ஊருக்கு போகும் போது நிறை மரங்களை பிடித்து வர வேண்டும்!

இப்போது வலையில் சுட்ட சில படங்களுடன் எங்க ஊரில் எடுத்த சில மரங்கள்!

மா மரம்

(வலைப்படம்)
மாமரம் என்றால் நினைவுக்கு வருவது!!! எங்க ஊரில் சித்திரை மாதம் துவங்க இருக்கும் நேரங்களில் இந்த ''மாம்பூ''வாசனை எங்கும் வீசும் சித்திரை மாதம் மாம்பூ வாசனை என்றால் ஊர் திருவிழா நினைவுக்கு வரும்! அப்புறம் பழைய சோற்றுக்கு துவர்ப்புடன் கூடிய உப்பில் போட்ட மாவடு!!
வேப்ப மரம்


(வலைப்படம் )
வீட்டில் யாருக்காவது அம்மை போட்டு இருந்தால் வாசலில் வேப்பிலை தொங்கும்! எனக்கு வேப்பமரம் என்றால் சின்ன வயதில் வேப்பங்கொட்டை பொறுக்கி விற்றதுதான் நினைவுக்கு வரும் அப்போ கிலோ ஒரு ரூபாய்!
புளிய மரம்

புளிய மரங்களை பார்க்கும்போது வயதான பெரிய மனிதர்களை பார்க்கும் ஒரு உணர்வு உண்டாகிறது! இப்போது இருக்கும் புளிய மரங்கள் எல்லாம் மிக வயதான மரங்களாக தோன்றுகிறது! புதிதாக யாரும் புளிய மரங்களை நடுவதாக தெரியவில்லை! இப்போது உள்ள ரங்களின் ஆயுள் முடிந்து விட்டால் அடுத்தடுத்த தலை முறையினருக்கு புளி கிடைக்குமா ??

பலா மரம்


பலா மரம் மிக உறுதியானது எளிதில் வளராது,பலா
பிஞ்சை எங்கூரு பக்கம்
பலா மூஸ் அப்படின்னு சொல்லுவாங்க!
அத புளி குழம்பு,கறி குழம்புல போட்டு சமைப்பாங்க நல்லா இருக்கும்!!

தென்னை மரம்



தென்னை மரத்த பத்தி என்ன சொல்ல! நெறை சொல்லலாம்! தென்னைய பெத்தா இளநீரு +கள்ளு, புள்ளைய பெத்தா கண்ணீரு! இப்போதைக்கு இதான்!

ஈச்சை மரம்

இந்த ஈச்சை மரத்தின் பழங்கள் நல்ல சுவையுடன்தான் இருக்கும். ஆனால் சதை பற்று இருக்காது! ஆனால் அதன் கொட்டை மட்டும் பேரீச்சம் பழ கொட்டை போல இருக்கும்!


பனை மரம்

அண்ணன் தம்பி போல இருக்குல்ல? பனை மரம்னா பனங்கள்ளு,நண்டு ,தோசை,கார சட்னி இதான் நினைவு வருது!

நாவல் பழ மரம்


ஊர் பக்கம் இருக்கும் நாவல் பழங்களுக்கு தனி சுவை உண்டு ! இப்போ நாவல் பழ சீசன் மரத்தடியில சின்ன பசங்க பழம் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க!!


அரச மரம்

இது சின்ன சைஸ் மரம்! ''அரசன நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு ஒரு பழ மொழி இருக்குல்ல அத இப்படியும் சொல்லுறாங்க ''''அரசை நம்பி புருசன கைவிடாதே'' அப்படின்னு! அரச மரத்து காற்றை சுவாசிக்கும் போது பெண்களின் கர்ப்பப்பை வலிமை அதிகரிக்குமாம் அதனால் குழந்தை தங்காதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்! அதான் அரசை நம்பி புருசன கைவிடாதே!!
ஒதிய மரம்

இந்த மரம் எவ்ளோ பெருசா போனாலும் உறுதியா இருக்காது! அதான் ஒதியன் பெருத்தாலும் உத்திரத்துக்கு ஆகாதுன்னு சொல்லுறாங்க!!


கருவேல மரம்

இந்த கருவேல மரம் மருத்துவ குணம் வாய்ந்தது இதன் பட்டையில் இருந்து பல் பொடி தயார் பண்ணுறாங்க!

ரோட்டோரம் ஆலமரம்

பெரிய ஆல மரம் ஏதும் கண்ணுல மாட்டல!இங்க ஊருக்கு இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டர்!!

ஆத்தங்கரை தேக்கு மரம்

இது எங்க ஊரு ஆறு இன்னும் தண்ணி வரல தண்ணி வந்து கொஞ்ச நாள்ல பாக்கணும் ! கரையில உள்ள தேக்கு மரம் எல்லாம் பச்ச பசேல்னு அடர்த்தியா ஆயிடும்! ரெண்டு பக்கமும் உள்ள தேக்கு மரங்கள் ஆத்தையே மூடினது போல இருக்கும் அப்போ மழை பெஞ்சா கூட ஆறு நனையாது!!

கூந்தல் பனை மரம்

இந்த கூந்தல் பனை மிக பிரம்மாண்டமா வளரும் இந்த படத்தில உள்ளது அந்த மரத்தின் கன்றுதான் இதுவே ஒரு பனை மரம் உயரம் இருக்கும்! இது எவ்ளோ உயரம் வளரும்னு கீழ உள்ள படத்த பாருங்க!


நடுவுல உயரமா நிக்குறது பட்டுப்போன கூந்தல் பனை மரம். முன்னாடி இந்த மரம் கம்பீரமா நின்னது பார்க்க பிரம்மாண்டமா இருக்கும்! பட்டுப்போன இந்த மரத்த சுத்தி அரசமரம் ஒன்னு நிக்குது பாருங்க அப்போ இதன் உயரம் எப்படி இருக்கும் ?
மூங்கிலும் நாங்களும்

கிண்டி பூங்காவில் எடுத்த படம்






>

மர மொழிகள்

தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு !

பனை மரத்துக்கு கீழ நின்னு பால குடிச்சாலும் அது கள்ளா தான் தெரியும்!

ஒதியன் பெருத்தா உத்திரத்துக்கு ஆகாது !

அடிச்சு வளர்க்காத பிள்ளையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது !

ஆலும் ,வேலும் பல்லுக்குறுதி

ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை !

புடிச்சாலும் புடிச்சான் புளியன்கொம்பபோல!

இலவு காத்த கிளிய போல !

வாழையடி வாழையாக !

எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

போகும்போது புளியமரத்தடியில் போ
வரும்போது வேப்பமரத்தடியல் வா!

மரத்த வைச்சவன் தண்ணி ஊத்துவான்!!

ஆல்போல் தழைத்து அருகு போல்வேரோடி
மூங்கில் போல் சூழ்ந்து முடிவில்லாமல் வாழ்ந்திருப்போம்!




வேற ஏதும் தெரிஞ்சா சொல்லுங்க!


.........................................................................



>

மேன்சனில் நடந்த நான்சென்ஸ் -நீதி கிடைக்குமா ?

தற்போது சென்னை நகரில் அக்னி சுடர் என்னும் செய்தி பத்திரிக்கை வலம் வருகிறது ஒரு இந்த பத்திரிகை போலீஸ் -பொதுமக்கள் நட்புறவு வார இதழாக வருகிறது! சமுக அவலங்களையும்,தவறு செய்யும் அதிகாரிகள்,காவல் துறையினர்,அரசியல் வாதிகள் என எவரையும் விட்டு வைக்காமல் எல்லோரையும் சுட்டி காட்டுகிறது சில இடங்களில் இந்த பத்திரிகை செய்தியால் நடவடிக்கையும் எடுக்க பட்டு உள்ளது!

இந்த பத்திரிக்கை மிக தைரியமாகவும்
நேர்மையாகவும் செயல் பட
ஒரு முக்கிய காரணம் உள்ளது !

இந்த பத்திரிக்கையின் Executive Director ஆக இருப்பவர்
சமுக நல ஆர்வலர்.... மக்கள் பிரச்சனைக்காக பல
பொதுநல வழக்குகளை தொடுத்து நியாயம்கிடைக்கசெய்த

திரு ,ட்ராபிக் கே .ஆர். ராமசாமி அவர்கள்...

இதன் ஆசிரியர் திரு , டி .எஸ் .ஜேம்ஸ் நாயகம்

தலைமை நிருபர் திரு .என் .ஜெகதீஸ்வரன்

இதில் ஜெகதீஸ்வரன் என்பவர் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவர்!

சமீபத்தில் பதிவர் ரமேஷ் என்பவர் கிணறு வெட்ட பூதம் என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி இருந்தார் நண்பர் ஜமால் பதிவின் வாயிலாக அந்த பதிவினை பார்த்தேன்! அந்த பதிவில், தான் தங்கி இருந்த மேன்சனில் நல்ல குடிநீர் வேண்டி போராடியது,அந்த பிரச்சனை காவல் நிலையம் வரை சென்றது அந்த பிரச்சனையால் அவர் அடைந்த இன்னல்கள் எல்லாவற்றையும் தம் பதிவில் கூறி இருந்தார்! அந்த சுட்டி இங்கே!

நான் அக்னி சுடர் பத்திரிக்கையின் தலைமை நிருபர் ஜெகதீஸ்வரனை அழைத்து அந்த பதிவினை காட்டினேன்! இந்த பிரச்சனைக்கு தங்கள் பத்திரிகை ஏதேனும் செய்ய முடியுமா என கேட்டேன்! அவர் திரு ரமேஷ் அவர்கள் இந்த பிரச்சனை சந்பந்தமாக என்ன என்ன ஆதாரங்கள் வைத்து உள்ளாரோ அனைத்தும் வேண்டும் என கேட்டார்!

நான் திரு ரமேஷ் அவர்களை தொலை பேசியில் அழைத்து விபரம் சொன்னேன்! அவரும் மறுநாள் தான் தண்ணீர் பரிசோதனை செய்த சான்று, மற்றும் கமிஷனர் அலுவலகம் சென்ற சான்று, இந்த பிரச்சனை ஜுனியர் விகடன் பத்திரிகையில் வந்த செய்தியின் நகல்,டெக்கான் குரோனிகல் பத்திரிக்கையில் செய்தி வந்த நகல் மேலும் சில ஆதாரங்களை நேரில் வந்து என்னிடம் கொடுத்தார். நான் அதை நிருபரி டம் கொடுக்க இந்த பிரச்சனை திரு ட்ராபிக் ராமசாமி அவர்களிடம் செல்கிறது. திரு ட்ராபிக் ராமசாமி அவர்களும் திரு. ரமேஷை அழைத்து சில விபரங்களை கேட்டு அறிந்துள்ளார். இப்போது இந்த பிரச்சனை அக்னி சுடர் பத்திரிகையில் மேன்சனில் நடந்த நான்சென்ஸ் என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளிவந்தது உள்ளது.





இந்த அக்னி சுடர் பத்திரிகையானது தலைமை செயலகம் ,எழும்பூர் கமிஷனர் அலுவலகம் ,புறநகர் கமிஷனர் அலுவலகம், உயர்நீதிமன்றம் ,உச்ச நீதிமன்றம் ,சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மற்றும் முதலமைச்சர் அலுவலகம்,அனைத்து அமைச்சக அலுவலகங்கள் ,மாநகராட்சி அலுவலகம் ஆகிய இடங்களுக்கு செல்கிறது!!!


நீதி கிடைக்குமா ? பொறுத்திருந்து பார்க்கலாம்!!


..................................................................

>