என்ன சொல்லி ? எப்படி உணர்த்தி கூப்பிட்டு இருக்கும் அந்த யானை ?


கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ்ல ஒருகாட்சி ,ஒருகாட்டு பகுதில வனத்துறையினர் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைச்சு இருக்காங்க ! அதுல தவறிபோய் ஒரு குட்டியானை விழுந்துடுது . தாய் யானை வந்து அந்த குட்டியானையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணுது முடியல . உடனே அந்த தாய் யானை காட்டுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுடுது . கொஞ்ச நேரத்துல திரும்பி வர்ற அந்த யானை அது கூட முணு யானைங்கள கூட்டிகிட்டு வருது எல்லா யானைங்களும் சேர்ந்து அந்த குட்டியானைய காப்பாத்தி கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போய்டுது .நம்மையெல்லாம் ஆச்சர்யபடவைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி இது .


அதுசரி ? காட்டுக்குள்ள போன தாய்யானை என்ன சொல்லி எப்படி உணர்த்தி மத்த யானைகளை கூப்பிட்டு இருக்கும்!!!!

.....................................................................................................................................................................

>

28 comments:

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான விடயம் தான்.

Vidhya Chandrasekaran said...

மிருகங்களின் பாஷையை மனிதனென்னும் மிருகம் புரிந்துகொள்ளாத வரை மிருகங்களுக்கு நல்லது.

S.A. நவாஸுதீன் said...

அதானே? என்ன சொல்லி இருக்கும். இறைவனின் படைப்பு இங்கேதான் அதிசயப்பட வைக்கிறது

harveena said...

annnnaa,,, suthi suthi thanni matter pathiyeeee,, news varuthu ???????? ;-)

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வான விடயம் தான்.

சந்தனமுல்லை said...

ஆமா உண்மையில் மிக நெகிழ்வான விஷயம்!

மங்கை said...

veena..ha ha ha...பாவம் அவர் ஆல்ரெடி ஏன் தான் அவர் அந்த பதிவ போட்டேன்னு புலம்பீட்டு இருக்கார்... நீங்க வேற

Poornima Saravana kumar said...

theriyalaiye:(

இராகவன் நைஜிரியா said...

// வித்யா said...

மிருகங்களின் பாஷையை மனிதனென்னும் மிருகம் புரிந்துகொள்ளாத வரை மிருகங்களுக்கு நல்லது.
//

ரிப்பீட்டேய்...........

ஹேமா said...

அதுதன் தாய்மைன்னு சொல்ற விஷயமோ...!

புதியவன் said...

//நம்மையெல்லாம் ஆச்சர்யபடவைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி இது .//

நெகிவான விசயம் தான்...

புதியவன் said...

//அதுசரி ? காட்டுக்குள்ள போன தாய்யானை என்ன சொல்லி எப்படி உணர்த்தி மத்த யானைகளை கூப்பிட்டு இருக்கும்!!!!//

எல்லா உயிரினங்களுக்கு அவற்றிற்குரிய
தகவல் தொடர்பு மொழி உண்டு என்று
கேள்விப் பட்டிருக்கிறேன்...
மனிதர்களுக்குத் தான் அவை புரிவதில்லை
என்பது என் கருத்து...

குடந்தை அன்புமணி said...

இராகவன் நைஜிரியா said...
// வித்யா said...

மிருகங்களின் பாஷையை மனிதனென்னும் மிருகம் புரிந்துகொள்ளாத வரை மிருகங்களுக்கு நல்லது.
//

ரிப்பீட்டேய்...........

அமுதா said...

/*வித்யா said...
மிருகங்களின் பாஷையை மனிதனென்னும் மிருகம் புரிந்துகொள்ளாத வரை மிருகங்களுக்கு நல்லது.*/
ரிப்பீட்டு

Rajeswari said...

யானைக்களுக்குல்லே பாஷை இருக்கதானே செய்யும்

வால்பையன் said...

எல்லா விலங்குகளும் தங்களுக்குள் செய்திகளை பரிமாறி கொள்ளும் தன்மை வாய்ந்தவை தான்.

குறிப்பாக டால்பின் மற்றும் சிம்பன்சி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எல்லா விலங்குகளுக்குள்ளும் ஒரு சிக்னல் பரிபாஷைகள் இருக்கத்தானே செய்யும், அதுவும் ஆபத்து என்று வரும்போது கத்தும் போதோ, பிளிறும்போது மாறுபாடு இருக்கும் என்று நினைக்கிறேன். பிளிறலின் மாறுபாட்டை உணர்ந்து, ஆபத்து வந்திருக்கிறது என்று அறிந்து மற்ற யானைகள் அந்த தாய் யானையுடன் வந்திருக்கலாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹார்வீனா - பாவம் ஜீவன் விட்ருங்க,

இனிமே தண்ணி பக்கம் யானை இல்ல பூனை இருந்தா கூட போகமாட்டாராம்.

RAMYA said...

ஜீவன் நெகிழ்வான ஒரு பதிவை போட்டிருக்கிறீர்கள்

உங்கள் சிந்தனை என்றுமே மாருபட்டவைதான்.

எப்போதும் ஒரு தனி முத்திரை பத்திது தான் எழுதுகிறீர்கள்.

கலக்கறீங்க போங்க :)

RAMYA said...

யானை குட்டி தணீர் தொட்டிக்குள்ளே விழுந்தவுடனே கட்டுக்குள் ஓடிய யானை, யானைக்கென்று ஒரு பாஷை
உண்டாம்.

இதை யாகவா முனிவர் சொல்லலை.

சரி, காட்டுக்குள்ளே போய் அம்மா வாங்க, அப்பா வாங்க, அண்ணே வாங்க, தம்பி வாங்க, ஆத்தா வாங்க, பாட்டி வாங்க அப்படின்னும் யானையோட பாஷைலே அதோட உறவுகள் அனைத்தையும் அழைத்திருக்கும் என்று நான் நினைக்கின்றேன்.


அருமையான சிந்தனை உங்களுக்கு நான் மறுபடியும் சொல்லிக்கறேன் இங்கே !!

அண்ணன் வணங்காமுடி said...

"என்ன சொல்லி ? எப்படி உணர்த்தி கூப்பிட்டு இருக்கும் அந்த யானை ?" //

கின்கீசா மன்கிசா, மன்கிசா பாயாசா

அ.மு.செய்யது said...

ஒரு வேள அப்படி சொல்லிருக்குமோ..

ஒரு வேள இப்படி சொல்லிருக்குமோ !!!!!!!!!

( நெகிழ வைத்த விஷயம் ஜீவன்..சூப்பர் )

harveena said...

மங்கை மேடம்! அமிர்தவர்ஷிணி அம்மா! ஹா... ஹா...

அரசியல்ல இது சாதாரணம் நம்ம அண்ணா தான்,,, குட் அண்ணா ;-)

SK said...

நல்ல கேள்வி தான் :)

ராமலக்ஷ்மி said...

எல்லோரும் சொல்லியிருப்பதேதான். விலங்குகளுக்கும் பாஷை உண்டு. நமக்குதான் அது புரிவதில்லை.

நெகிழ்வான சம்பவம்.

Rajkumar said...

என் கூட வரவங்களுக்கு இன்னிக்கு தண்ணி பார்ட்டி உண்டுன்னு பிளிறி இருக்கும் .

Rajkumar said...

என் கூட வரவங்களுக்கு இன்னிக்கு தண்ணி பார்ட்டி உண்டுன்னு பிளிறி இறுக்கும்.

அது சரி(18185106603874041862) said...

//
வித்யா said...
மிருகங்களின் பாஷையை மனிதனென்னும் மிருகம் புரிந்துகொள்ளாத வரை மிருகங்களுக்கு நல்லது.
March 30, 2009 8:12 PM
//

மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் வித்யா...

மனிதன் மிருகங்களின் பாஷை அறியும் நாள் மிருகங்களுக்கு ஒட்டு மொத்த அழிவு நாள்..