பயங்கரவாதம் (முனிவரும், கொட்டும் தேளும்)

எல்லோருக்கும் தெரிஞ்ச கதை ஒன்னு

ஒரு ஊருல ஒரு முனிவரும் அவருக்கு சில
சீடர்களும் இருந்தாங்க.ஒரு வாட்டி அந்த
முனிவர் ஒரு குளத்துல தன்
சீடர்களோட
குளிச்சுகிட்டு இருந்தாராம்.அப்போ தண்ணில
ஒரு ''தேளு'' தத்தளிச்சிகிட்டு இருந்திச்சாம்
அத பார்த்த முனிவர் அந்த தேள கைல எடுத்து
கரைல விட்டாராம் கைல எடுக்கும் போது
தேளு கைல ''கொட்டிச்சாம்'' அத பொறுத்துகிட்டு
கரைல விட்டாராம்.கொஞ்ச நேரம் கழிச்சு
அந்த தேளு மறுபடியும் தண்ணிக்குள்ள வந்துச்சாம்
அந்த முனிவர் மீண்டும் அத புடிச்சு கரைல
விட்டாராம் அப்போதும் அந்த தேளு அவர் கைல
கொட்டிச்சாம் பொறுத்துகிட்டு கரைல விட்டாராம்.
இப்படியே நெறைய தடவை ஆச்சு.

இத பார்த்த அவரது சீடர்கள் கேக்குறாங்க ஏன் ?
அந்த தேள்தான் கொட்டுதே அத கொன்னுட்டா
என்ன? அதுக்கு அந்த முனிவர் சொன்னாராம்
''கொட்டுறது தேளோட குணம் அத காப்பாத்துறது
என்னோட குணம்''
அப்படின்னு உடனே அவரது
சீடர்கள் ஆகா!ஓஹோன்னு! புகழ்ந்தாங்கலாம்
அந்த முனிவரை!

சரி! முனிவர் மகா புருசர் தேள் கொட்டினத
பொறுத்துகிட்டார்.. ஆனா அவரால் காப்பாற்ற
பட்ட தேள் அவர் சீடர்களை கொட்டிஇருந்தா?
கரைல இருக்குற மற்ற மக்களை கொட்டி இருந்தா?


இப்படித்தான் ஆச்சு நம்ம நிலைமை! நம்ம நாட்டில
''மஹா'' மனது படைத்த பெரியவர்கள் தங்கள்
பெரிய மனிதாபிமானிகள்,உயர்ந்த குணம்
படைத்தவர்கள் என்ற ஒரு ''இமேஜ்'' க்குகாக
தேள் போல இருந்த தீவிரவாதிகளை காப்பாத்தி
விட்டுட்டு நல்ல பெயரோட செத்து போய்ட்டாங்க
ஆனா அந்த தேள் இப்போ குட்டி போட்டு நல்லா
பெருகி நம்ம எல்லோரையும் கொட்டிகிட்டு இருக்கு!

எல்லாம் நம்ம தலை விதி!!

''ஊடு பூந்து அடிச்சுட்டான்'' பாகிஸ்தான் காரன்
தீவிரவாதிகள எங்க கிட்ட ஒப்படைங்கன்னு
பாகிஸ்தான் கிட்ட கெஞ்சுது நம்ம அரசு!


என்னமோ....
''புது பொண்டாட்டிகிட்டமுத்தம் கேட்டு
கெஞ்சுற புருஷன் காரன் மாதிரி ''


போர் தொடுக்கனும்னு ஒரு பேச்சு அடிபடுது,
எதோ ஒரு தீவிர வாத அமைப்பு செய்த செயலுக்காக
அவசரப்பட்டு போர் தொடுக்க கூடாது அப்படின்னும்
ஒரு சாரார்!

நமக்கும் பாகிஸ்தானுக்கும் தீர்க்க படாத, தீர்க்க
பட வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு!

பாகிஸ்தான் ஆக்கிரமிச்சு வைச்சு இருக்கிற காஸ்மீர்
பகுதிய மீட்கணும் அதுக்கு போர் ஒண்ணுதான் வழி!

போர் தொடுக்க இதுபோல சம்பவங்கள
ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது ??

( குமுற வைத்த அமிர்த வர்ஷினி அம்மாவுக்கு நன்றி)

>