எனக்கு புடிச்ச கோயம்புத்தூர்

வருங்கால முதல்வர்ல நம்ம நண்பர் ''குடுகுடுப்பை''
தஞ்சை பற்றி பதிவு போட அழைப்பு விடுத்திருந்தார்.
இப்போ அங்க கொங்கு நாட்டு ''மகேசும்''நெல்லை
''நசரேயனும்'' கலக்கிக்கிட்டு இருக்காங்க அதன் பிறகு
என் தஞ்சை பதிவ போடலாம்னு இருக்கேன்.


நம்ம ஊரபத்தி நாமளே எழுதுறது சிறப்புதான்!
ஆனா எங்க தஞ்சைய பத்தி வேற யாரவது புகழ்ந்து
பேசினா ரொம்ப சந்தோசமா இருக்கும்.
நான் ''கோவைல'' மூணு வருஷம் இருந்து இருக்கேன்.
அதுனால கோவை பத்தி ஒரு பதிவு போடனும்னு
கொஞ்ச நாளா ஒரு ஆசை அதான் இந்த பதிவு!

நான் பிறந்தது ''அந்தமான்ல'' அங்க,எழு ,எட்டு
வயசுவரை இருந்து இருப்பேன் அதன் பிறகு
எங்க ஊருக்கு வந்தாச்சு.படிச்சது ,வளர்ந்தது
எல்லாம் எங்க ஊருதான்.இப்போ சென்னைல
குடும்பத்தோடசெட்டில் ஆயாச்சு.பதிமூணு வருஷம் ஆச்சு!
இடைல பன்னண்டாவது முடிச்சுட்டு நகை தொழில்
கத்துக்க கோயம்புத்தூர் போய்இருந்தேன்,அங்கேயே
ஒரு மூணு வருஷம் இருந்தேன்.எல்லோருக்கும் தன்
சொந்த ஊரு சொர்க்கம்தான் எனக்கும் அப்படித்தான்
ஆனா என் சொந்த ஊருக்கு நிகரா நான் நேசிச்ச ஊரு
கோயம்புத்தூரு.இப்போகூட பாருங்க குடும்பம்,
புள்ள குட்டியோட தான் சென்னைல இருக்கேன் ஆனா?
கோவை மேல உள்ள அந்த பாசமும், நேசமும்
சென்னை மேல துளியும் வரல? அப்படி என்னதான்
இருக்கு கோயம்புத்தூர்ல? சொல்லுறேன் கேளுங்க!


என் அப்பாதான் கோவைக்கு அழைச்சிகிட்டு போனார்
என் அப்பா பம்பாய் ல இருந்ததால அங்க அவருக்கு
தெரிஞ்சவங்ககோவைல இருந்தாங்க அவங்க
கிட்டதான் என்னை அழைச்சுகிட்டுபோனார்.

கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் ல
எறங்கி டவுன் பஸ் ஸ்டாண்ட் க்கு போறோம்.
மழை வர்ற மாதிரி குளு.குளுன்னு இருக்கு, நானும்
அப்பாவும் அப்போதான் முதல் முறை அங்க போறது!
நாங்க போக வேண்டியது ''பெரிய கடை வீதி''கைல
விலாசம் இருக்கு.எந்த பஸ்ல போகனும்னு விசாரிக்கணும்.
எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கிட்ட விலாசம் விசாரிக்க
சின்ன எரிச்சல்!ஏன் அப்படின்னா ?அதுக்கு முன்னாடி சென்னைக்கு
அடிக்கடி போவேன் அப்போ யார்கிட்டயாவது விலாசம்
விசாரிச்சா என்னை பெரிய இவங்க மாதிரி அலட்சியமா
பதில் சொல்லுவாங்க செம கடுப்பா இருக்கும் .

இப்போ அங்க என் அப்பாதான் கேக்குறார் அதுக்கு ஒருத்தர்
அங்க போய் நில்லுங்க, உக்கடம் போற பஸ் வரும்
அதுல போங்க அப்படின்னு.விலாசம் விசாரிக்கும் போது
ஒருத்தர், இவ்ளோ அக்கறையா பதில் சொல்லுறாரே
அப்படின்னு எனக்கு சின்ன ஆச்சர்யம்!

பஸ்ல ஏறி உக்காந்தாச்சு கண்டக்டர் கிட்ட அப்பா
சொல்லுறார்நாங்க ஊருக்கு புதுசு பெரிய கடை வீதி
ஸ்டாப்ல எறக்கி விடுங்கஅப்படின்னு.
(எனக்கு கோவம் ஊருக்கு புதுசுன்னா யாராவது
மதிப்பாங்களா இதெல்லாம் போய் அவர் கிட்ட சொல்லிக்கிட்டு)
அதுக்கு அவர் சொல்லுறார் ...அப்படிங்களா!சரிங்க!
ஸ்டாப்வந்ததும் சொல்லுறேன் எறங்கிகுங்க
அப்படிங்குறார், அட ! எனக்கு இன்னும் ஆச்சர்யம்!
இதுக்கெல்லாம் மேலஎங்க முன்னாடி இருந்த ஒருத்தர்
ஏனுங்க!பெரிய கடைவீதியா போறீங்க?
நானும் அங்கதாங்க போறேன் வாங்க!
நானே இடம் காட்டுறேன் அப்படின்னு! அட என்ன
மக்கள் இவங்க? வந்து எறங்கி சில நிமிசத்துலே
புது ஊர் அப்படிங்கிற ஒரு பயம் போய் ஒரு உற்சாகம்
வந்துடுச்சி.

இப்படித்தான் என் கோவை வாழ்க்கை ஆரம்பம்,
முதல்ல ஏறங்கினப்போ மழை வர்ற மாதிரி இருந்துசின்னு
சொன்னேன்ல! இல்லங்க, அங்க எப்போதும் அப்படிதான்
இருக்கும் சும்மா குளு குளுன்னு !


கோவை தண்ணிய பத்தி சொல்ல வேண்டியது இல்ல
சிறுவாணி தண்ணின்னா உலக அளவில் புகழ் பெற்றது
முக்கியமா நான் சொல்ல விரும்புவது, அங்குள்ள மக்கள்!
ஏனுங்க! ஏனுங்க! அப்படின்னு அவங்க கூப்பிடுற
அந்த கொங்கு தமிழ கேட்டுகிட்டே இருக்கலாம்.
புதுசா போறவங்களுக்கு என்ன மரியாதை!

அருமையான ரசனை மிகுந்த மக்கள்!
வயசுல பெரியவங்க கூட சின்னவங்கள
வாங்க,போங்கன்னு அழைக்கிற அந்த அழகு!
நெறைய கத்துகிட்டேன் நான் அங்க இப்போகூட
நான் என்னை விட சின்னவங்கள கூட வாங்க,
போங்கன்னுதான் கூப்பிடுறேன்.

இன்னும் என்ன சொல்லுறதுன்னு யோசிக்கிறேன்!
எனக்கு தொழிலையும்,நல்ல பண்பையும் கத்து
கொடுத்த தங்க மான ஊரு அன்பாலயும்,பாசத்தாலயும்
நனைக்கிற மக்கள்.அடுத்த ஜென்மம் அப்படி இருந்தா
கோவைல தான் பொறக்கணும்.

நான் அங்க இருக்கும் போது வடகோவை மேம்பாலம்
கட்டிக்கிட்டு இருந்தாங்க அத கட்டி முடிச்சோன பார்க்க
ஆசைஇன்னும் வாய்ப்பு கிடைக்கல.

அப்புறம் முக்கியமான விஷயம்!

எனக்கு கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்தப்போ
வீட்டுல சொல்லி கோவை பக்கம் பார்க்க சொன்னேன்
எதுக்கு அவ்ளோ தூரம்னு சொல்லி வேணாம்னு
சொல்லிட்டாங்கரொம்ப கம்பல் பண்ணினா
நான் அங்க யாரையும்லவ் பண்ணுறதாநெனைக்க
போறாங்கன்னு விட்டுட்டேன்.அப்படி அங்க மட்டும்
பொண்ணு அமைஞ்சு இருந்தா ''வத்தலோ'' ''தொத்தலோ''
யாரா இருந்தாலும் சரின்னுசொல்லி இருப்பேன் .

கோவைல இருந்தப்போ சாப்பாட்டுக்கு கூட
காசில்லாமநெறைய நாள் இருந்துருக்கேன்
ஆனாலும் அங்கவாழ்ந்ததுஒரு ''பொற்காலம் '' தான்
>