காந்திஜி செய்தது சரிதானா ?



ரொம்ப வருசமா மனசுக்குள்ள ஒரு கேள்வி
கெடந்து அரிச்சுகிட்டே இருக்குது .

நாம வெளியில போகும்போது,அதாவது
ஒரு விசேசத்துக்கோ,வெளி ஊருக்கோ
போகும் போது எப்படி போவோம்?
என்னதான் நம்மகிட்ட போட்டுக்க
நல்ல துணிமணி இல்லாட்டியும் இருக்குறதுலேயே
நல்ல துணியா பார்த்து நல்லா துவைச்சு,
முடிஞ்சா அயன்பண்ணிதான் போட்டுக்கிட்டு
போவோம் .அதுல ஒரு தன் மானமும்,
சுய கவுரவமும் இருக்கு இல்லையா?

ஆனா!
நம்ம தேச பிதா!மஹாத்மா காந்தி!
நம்ம நாட்டில போட்டுக்க கூட துணி இல்லாம
மக்கள் சில இடங்கள்ல இருந்ததால,இனிமேல
நானும் சட்டை போட்டுக்க மாட்டேன், எல்லா
மக்களுக்கும் போட்டுக்கொள்ள உடை கிடைக்கிர
வரையில் இப்படித்தான் இருப்பேன்னு மேல் சட்டையே
போட்டுக்கல.அதுல நம்ம நாட்டு மக்கள் மேல அவர்
வைச்சு இருக்குற அன்பும்,மனிதாபிமானமும்
தெரிஞ்சது.

சரி!
அதேபோல சட்டையே போட்டுக்காம
உலகம் முழுவதும் சுத்தியும் வந்தார்.
அப்போ அதை பார்த்த வெளிநாட்டுகாரங்க
நம்ம இந்திய மக்களை பத்தி என்ன நினைச்சு
இருப்பாங்க? இந்திய மக்கள் எல்லோரும்
போட்டுக்க கூட துணி இல்லாத பஞ்ச,பரதேசிங்க
அப்படின்னு நினைச்சு இருக்க மாட்டாங்களா ?

அதுனால! இந்திய மக்களோட தன்மானமும்
சுய கவுரவமும் பாதிக்க பட்டு இருக்காதா ?


நான் கேக்குறது, சரியா? தப்பா?
>