என்ன சொல்லி ? எப்படி உணர்த்தி கூப்பிட்டு இருக்கும் அந்த யானை ?


கொஞ்ச நாள் முன்னாடி சன் நியூஸ்ல ஒருகாட்சி ,ஒருகாட்டு பகுதில வனத்துறையினர் காட்டு விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக ஒரு தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைச்சு இருக்காங்க ! அதுல தவறிபோய் ஒரு குட்டியானை விழுந்துடுது . தாய் யானை வந்து அந்த குட்டியானையை காப்பாத்த எவ்வளவோ முயற்சி பண்ணுது முடியல . உடனே அந்த தாய் யானை காட்டுக்குள்ள ஓடிப்போய் மறைஞ்சுடுது . கொஞ்ச நேரத்துல திரும்பி வர்ற அந்த யானை அது கூட முணு யானைங்கள கூட்டிகிட்டு வருது எல்லா யானைங்களும் சேர்ந்து அந்த குட்டியானைய காப்பாத்தி கூட்டிகிட்டு காட்டுக்குள்ள போய்டுது .நம்மையெல்லாம் ஆச்சர்யபடவைத்த , நெஞ்சை நெகிழ வைத்த காட்சி இது .


அதுசரி ? காட்டுக்குள்ள போன தாய்யானை என்ன சொல்லி எப்படி உணர்த்தி மத்த யானைகளை கூப்பிட்டு இருக்கும்!!!!

.....................................................................................................................................................................

>